தினம் ஒரு கதை - முயற்சி வெற்றி தரும்

ஒரு நாட்டில் மன்னன் ஒரு போட்டி வைத்தான்!!

அதாவது கோட்டை வாசல் கதவை இரண்டு கைகளால் ஒரே தள்ளில் தள்ளி திறக்க வேண்டும்!!

அப்படி திறந்தால் வெற்றி பெற்றவன் நாட்டின் அடுத்த மன்னன் ஆக முடி சூடப் படுவார்கள்!!

ஆனால் கதவை திறக்க முடியாமல் தோற்று விட்டால்!! இரண்டு கைகளையும் வெட்டி விடுவார்கள்!!

இது தான் போட்டியின் விதி!!

நிறைய பலசாலிகள் நாட்டின் அடுத்த மன்னராக ஆசை!!

ஆனால் தோற்று விட்டால் !! கை போய் விடும் அதனால்!! பயந்து கொண்டு யாரும் முன்னே வர வில்லை!!

ஒரே ஒரு வீரன் மட்டும் முன் வந்தான் !!

மன்னன் அந்த வீரனிடம்!! மகனே!! போட்டியின் விதிகள் உனக்கு தெரியும் அல்லவா!!

தோற்றால் கை வெட்டி விடுவார்கள்!!

அந்த வீரனோ பரவாயில்லை மன்னா!! நான் போட்டிக்கு தயார் !! என்று சொல்லி கோட்டை வாசல் சென்றான் !!

கடவுளை வேண்டி கொண்டு இரண்டு கைகளால் கோட்டை வாசல் கதவை பலம் கொண்டு திறக்க!!

திக்!! திக் !!

தருணங்கள்!!

கதவு எளிதாக திறந்தது!!

ஏனென்றால் கதவு பூட்ட படவே இல்லை!!

மக்கள் வெற்றி பட்ட வீரனை ஆராவார சத்தம் கொண்டு வாழ்த்தினர்!!

மன்னர் முன் சென்று வணங்கிய வீரனை!!

மன்னன் கேட்டார் !! எப்படி உன்னால் இது முடிந்தது!

மன்னா !! என் உடல் வலிமையை நான் அறிவேன்!! ஒரு தடவை முயன்றால் வெற்றி பெற்றால் நாட்டின் அடுத்த மன்னன்!!

தோற்றால் இரண்டு கைகள் தானே போகும் !! உயிர் இல்லையே!!

அதனால் தான் முயன்று பார்த்தேன்!! இப்பொழுது உங்கள் முன் வெற்றியுடன்!!

என்றான் !

பாருங்கள் வெற்றிக்கு காரணம் முயற்சி தான் !!

தோல்விக்கு காரணம் முயலாமை!!!

அதனால் எந்த ஒரு செயலானாலும் முயற்சி செய்து போராடுங்கள் கட்டாயம் வெற்றி உங்களுக்கு தான் !!

நன்றி!!

Post a Comment

0 Comments