SSTA -TET இடைநிலை ஆசிரியர்கள் சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 14 ஆண்டுகால போராட்டத்தின் ஒருபகுதியாக அடையாள அட்டை அணியும் 2ம் கட்ட போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று முதல் துவக்கம்

*செப்டம்பர்* *5* முதல் *பேட்ஜ்* அணிவது ஏன்?

1.உளவுத்துறை மூலம் தகவல்  அரசுக்கு உடனே செல்லும்.

2.பயிற்சியின் போது அரசால் எடுத்து அனுப்ப கூடிய அத்தனை புகைப்படங்களிலும் நம் பேட்ஜ் அரசுக்கு போஸ் கொடுக்கும்.

3.நம் கூடயே இருந்து கொண்டு மற்ற சங்கத்துக்கு ஜால்டரா போடும் ஒட்டுண்ணிகளை அடையாளபடுத்தலாம்.

4.அத்தனையும் தாண்டி நம் உரிமைத்தீயை நெஞ்சில் ஏற்றி வீர நடை போடும் போது,வரும் தொடர் உண்ணாவிரதத்திற்கு மனதளவில் தாயாராகி விடுவோம்.

5.பெற்றோர் உள்ளிட்டவர்களிடம்  உங்கள் குழந்தைகளின் கல்வி 1% கூட பாதிக்காத வண்ணம் விடுமுறையில் உண்ணாவிரதம் என்பதை தினம் தினம் பதியவைக்கலாம்.

6.நம் ஒற்றுமையை பறைசாற்றும் அச்சாணி.இதன் வெற்றியை பார்த்து மாநில தலைமைகளின் கைகள் பலப்படும்.

7.அனைவரும் தினம் தினம் நம்மை நாம் பலப்படுத்த உதவும்.

திருப்பூர் மாவட்ட SSTA பேரியக்கம்


Post a Comment

0 Comments