தினம் ஒரு கதை -உப்பு காட்டிய வாழ்க்கை



ஒரு கிராமத்தில் மிகவும் புகழ் பெற்ற துறவி ஒருவர் வந்திருந்தார்.

அதை அறிந்த அவ்வூர் மக்கள் அவரைக் காண ஏராளமாகக் குவிந்திருந்தனர்.

அக்கூட்டத்தில் ஒரு இளைஞர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார்.

அவரைக் கண்ட துறவி, தன்னிடம் அவரை அழைத்து இளைஞரின் சோகத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

இளைஞரோ தன் வாழ்வு தாங்க முடியாத வலியும், வேதனையும், சோகமும் நிறைந்தது என்றும் தன்னால் மகிழ்வாக வாழ முடியவில்லை என்றும் காரணத்தைக் கூறினார்.

இதை கேட்ட துறவியோ, “சரி.. நீ சென்று கை நிறைய உப்பு கொண்டு வா...” என்றார்.

சிறிது நேரம் கழித்து உப்புடன் வந்தார் இளைஞர்.

துறவி இளைஞரை அழைத்துச் சென்று, ஒரு குவளைக் குடிநீரில் ஒரு பாதி உப்பைக் கரைத்துக் குடிக்கச் சொன்னார்.

உப்பு கலந்த நீரைக் குடித்த இளைஞன் மிகுந்த துவர்ப்பு காரணமாக முகம் சுழித்தார்.

துறவி, “குடிநீர் சுவை எப்படி உள்ளது?” என்றார்.

இளைஞன், “மிகவும் துவர்ப்பு...” என்றான்.

மீண்டும் இளைஞனை அழைத்துக் கொண்டு, துறவி அருகாமையில் இருந்த ஒரு ஏரிக்கரைக்குச் சென்றார்.

இளைஞனின் கையில் இருந்த மறுபாதி உப்பை ஏரியின் நீரில் போடச் சொன்னார்.

பின் ஏரியில் உப்பு கரைந்த நீரைக் குடிக்கச் சொன்னார்.

குடித்துக் கொண்டிருந்த இளைஞரிடம் மீண்டும் துறவி, “இப்போதும் குடிநீர் துவர்க்கிறதா?” என்றார்.

இளைஞனோ, “இல்லை... எப்போதும் போலவேக் குடிக்க நன்றாகத்தான் இருக்கின்றது...” என்றார்.

இளைஞனின் தோல்களைத் தட்டிக் கொடுத்த துறவி, சிரித்துக்கொண்டே, “வாழ்வில் வேதனை என்பது இந்த உப்பு போன்றதுதான். உப்பின் அளவு கூடாமல் குறையாமல் அப்படியேதான் உள்ளது. ஆனால், உப்பின் சுவை நாம் பயன்படுத்திய பாத்திரத்தின் அளவைப் பொருத்தே மாறுபட்டது. அதுபோலத்தான் வாழ்வின் வேதனையும், வலியும், சோகமும்... வேதனையின் போது உனது சிந்திக்கும் திறனை விரிவுபடுத்தி யோசிக்கக் கற்றுக்கொள். உனது மனதின் சிந்திக்கும் திறனை வெறும் குவளை அளவாய் வைத்திருப்பதை விட... ஒரு ஏரியின் அளவு போல் விரிவுபடுத்திச் சிந்திக்கக் கற்றுக்கொள். நிச்சயம் வாழ்க்கை கவலைகளையும் வேதனைகளையும் வலிகளையும் வெற்றி கொள்ளச் செய்யும்...” என்று கூறி முடித்தார்.

இளைஞனும் அவருக்கு நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியுடன் சென்றான்......

Post a Comment

0 Comments