நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! ராஜஸ்தான் மாணவி முதலிடம்: 9.93 லட்சம் பேர் தேர்ச்சி. தமிழ்நாடு 28 வது இடத்திற்கு சென்றது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது! ராஜஸ்தான் மாணவி முதலிடம்: 9.93 லட்சம் பேர் தேர்ச்சி


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டது. இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த தனிஷ்கா என்ற மாணவி முதலிடமும், டெல்லியைச் சேர்ந்த வட்ஸா ஆஷிஸ் பத்ரா 2வதுஇடத்தையும் பிடித்தனர்

நாடு முழுவதும் கடந்த ஜூலை 17ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடந்த நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ-மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.

கடந்த ஜூலை 17ஆம் தேதி 497 நகரங்களில் உள்ள 3,570 தேர்வு மையங்களிலும், இந்தியாவுக்கு வெளியே  14 நகரங்களிலும் நீட் தேர்வு நடந்தது. இதில் 95% பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்

முதல்முறையாக இந்தியாவுக்கு வெளியே அபு தாபி, பாங்காக், கொழும்பு, தோஹா, காத்மாண்டு, கோலாலம்பூர், லாகோஸ், மனாமா, மஸ்கட், ரியாத், ஷார்ஜா, சிங்கப்பூர், துபாய், குவைத்சிட்டியில் தேர்வு நடந்தன.

சிபிஎஸ்இ முடிவுகள் தாமதமானதைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகளும் தாமதமானது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்து. அதன்படி இரவு 11.15 மணிக்கு நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

Post a Comment

0 Comments