பதவி உயர்வில்லாத GO.243 மூலம் கலந்தாய்வு நடைபெற்றால், கலந்தாய்வு நடைபெறும் இடம் போராட்டகளமாகும் - டிட்டோஜாக் தீர்மானம்.

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
 *💥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டம் கூடியது:*

  
 *🔥டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்  குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று(8.5.2024) காணொலி  வாயிலாக மாலை 6  மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில்  அனைத்து சங்கங்களின்  உயர்மட்டக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.*

  *🔥(1)அரசாணை 243 அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை கண்டித்து 13/5/2024 அன்று மாவட்டத்  தலைநகரங்களில் டிட்டோஜாக் சார்பில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது.*

*💥(2) டிட்டோஜாக் கோரிக்கையை ஏற்காமல்  கலந்தாய்வு நடத்தத்  திட்டமிட்டால் கலந்தாய்வு நடைபெறுகின்ற தினத்திலிருந்து தினசரி கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு முன்பாக கலந்தாய்வை  நடத்தவிடாமல்  தொடர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.*

*💥(3) 10.5. 2024 அன்று மாநில தேர்தல் ஆணையாளரை சென்னையில் டிட்டோஜாக் சார்பில்  சந்திப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

Post a Comment

0 Comments