திட்டமிட்ட படி நாளை தமிழகம் முழுவதும் பள்ளி, அரசு அலுவலகங்களை முழுவதுமாக அடைத்து போராட்டம் - ஜாக்டோ ஜியோ


  *நாளை நடைபெற உள்ள. ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் நமது வட்டாரத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் கலந்து கொள்வதால் 100% பள்ளிகள் மூடப்பட்டு வேலைநிறுத்தம் முழு வெற்றி பெறும்  என நம்புகிறோம்.*

 *நாளை வேலைநிறுத்த நாளில் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஏதேனும் நடைபெற்றால் கலந்து கொள்ள முடியுமா? என்ற எந்த சந்தேகமும் எழ வேண்டாம். பயிற்சிக்கு  யாரும் செல்ல வேண்டியதில்லை. அங்கு எந்த ஆசிரியரும் வருகை புரியாத சூழல் ஏற்படும் போது பயிற்சி தானாக இரத்தாகிவிடும்.*

  *இன்று RL விடுப்பு எடுத்து விட்டு நாளை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறுவதால் இன்றைய நாளுக்கு எந்த பாதிப்பும் வரப் போவதில்லை என்பதையும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.*

*நாளை வேலைநிறுத்தத்தில் இருக்கும் போது EMIS பதிவுகளோ மற்ற எந்தப் பதிவுகளுமோ செய்ய வேண்டியதில்லை...*


*நாளைய வேலைநிறுத்த நாளின் போது ஒரு சிலர் மட்டும் பணிக்குச் சென்று நான் எந்தச் சங்கத்தையும் சாராதவர் எனக்கு யாருடைய ஒத்துழைப்பும் தேவையில்லை என்ற கருத்தை நிலைநாட்ட முயற்சி செய்ய வேண்டாம்..*🙏🏼🙏🏼

   *நாளை நடைபெறும் போராட்டம் நமக்கான போராட்டம், நம் இனத்திற்கான போராட்டம்  நம் மானம் காக்கும் போராட்டம் எனவே ஒவ்வொருவரும் பங்கெடுத்து நம்மை நம்ப வைத்து ஏமாற்றி வரும் இந்த அரசுக்கு தகுந்த பாடம் புகட்ட சபதம் ஏற்போம்.*

    நன்றி.....🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Post a Comment

0 Comments