கூட்டுறவு வங்கி கல்வி கடன் ரூ.5 லட்சமாக அதிகரிப்பு



கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடனுக்கான உச்சவரம்பை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மத்திய கூட்டுறவு வங்கிகள் நகர கூட்டுறவு வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வி கடனுக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.


Post a Comment

0 Comments