முடி வெட்டி சுய ஒழுக்கத்துடன் பள்ளிக்கு வா!!! அறிவுரை கூறிய ஆசிரியர்! தற்கொலை செய்த மாணவர் !!! ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!!! எங்கே செல்கிறது கல்வித்துறை???? அனைத்து ஆசிரியர் சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


📍📍📍📍📍📍📍📍

🔥புதுக்கோட்டை மச்சுவாடி அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் வகுப்பாசிரியர் தற்காலபணிநீக்க நடிவடிக்கைக்காக அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பாக இன்று இரவு 9 மணி முதல் 10.35 வரை காணொளி வாயிலாக கூட்டம் நடைபெற்றது

🔥இக்கூட்டத்தில் TNPTF சார்பாக மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாவட்டப் பொருளாளர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்

🔥கூட்டத்தை தோழர்.குமரேசன் (TNHHSSTA) அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்

📍📍📍📍📍📍📍📍

கூட்ட முடிவுகள்

📍📍📍📍📍📍📍📍

🔥1.நாளைய தினமே 27.9.23 பிற்பகல் 5 மணிக்கு குறைந்தது ஆயிரம் ஆசிரியர்களை ஒன்று திரட்டி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு செய்வது என்றும்

🔥2. அடுத்து ஓரிரு நாளில் ஆசிரியர்களுக்கு  பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி  சுவரொட்டி இயக்கம் நடத்துவது என்றும்

🔥3. அடுத்து ஓரிரு நாளில் அதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

📍📍📍📍📍📍📍📍


💪💪💪💪💪💪💪💪💪💪
*ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு கோரி  பெருந்திரள் முறையீடு* 

      *மாணவர்களை நெறிப்படுத்தும் ஆசிரியர்களை குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவதை கைவிட வேண்டும்* 

    *ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கிட வேண்டும்* 

    *பள்ளிகளில் சமூக விரோதிகளால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க சட்டம் உருவாக்க வேண்டும்* 

      என வலியுறுத்தி *27.09.2023 புதன்கிழமை மாலை 5.15க்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் பெருந்திரள் முறையீடு செய்வது* 

          என அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காணொளி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 *அநீதிகளுக்கு எதிராய் அணி திரள்வோம்*

  *ஆசிரியர் பேரினத்தை பாதுகாப்போம்* 

  *உணர்வுகளாய் ஒன்று கூடுவோம் வாரீர்*
👍👍👍👍👍👍👍👍👍
                 இவண்
*அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு*

*புதுக்கோட்டை மாவட்டம்*

Post a Comment

0 Comments