சம வேலைக்கு சம ஊதியம் - கோரிக்கை - SSTA இடைநிலை ஆசிரியர்கள் ஆயத்த மாநாடு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அரங்கம் கொள்ளா மாபெரும் கூட்டத்துடன் துவங்கியது

2009 க்குப்பின்   2009 க்கு முன்  ஒருநாள் இடைவெளியில் பணியேற்ற இடைநிலை  ஆசிரியர்களிடையே ரூ.  15000 க்கும் மேலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில்  கடந்த 14 ஆண்டுகளாக இடைவிடா பல்வேறு  போராட்டங்களை  தொடர்ந்து நடத்திவரும் SSTA -TET  அமைப்பின் வீரம் செரிந்த போராட்டங்களின் காரணமாக கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு சமவேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று  தேர்தல்  வாக்குறுதி எண் 311  ல் அறிவித்தது.  

தொடர்ந்து  ஆட்சியில்  அமர்ந்து  2 ஆண்டுகளாக வாக்குறுதி நிறைவேறாத நிலையில் கடந்த  டிசம்பர் 2022 ல் மீண்டும் ஒரு  உயிர்துறக்கும் உண்ணாவிரதம் நடைபெற்றது.  

அந்த  போராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில்  , தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும்  ஆசிரியர்களுக்கும்  DA அறிவித்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க ஒருநபர் குழு அமைத்தார்.  

அந்தக்குழு 3 மாதத்தில் அறிக்கையை  அளிக்கும்  என்று கூறிய நிலையில்  தற்போது.  8 மாதங்களை கடந்து இதுவரை  எந்த அறிவிப்பும் இல்லாத சூழலில் மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்தை  முன்னெடுக்க முடிவெடுத்துள்ளது SSTA அமைப்பு.

 அதன் ஒரு பகுதியாக இன்று  13.08.2023 ஆயத்த மாநாடு  சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடைபெற்று வருகிறது . 

எதிர்பாராத விதமாக  தமிழகம்  முழுவதும் இருந்து  100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 5000 க்கும் 
மேற்பட்ட ஆசிரியர்கள் வருகை தந்து  அரங்கை அதிர வைத்துள்ளனர்.  அரங்கம்  நிறைந்து, இருக்க இடமில்லாமல் அரங்கத்திற்கு  அருகில் ஒரு  தனி பந்தல் அமைத்து LED திரையில்  ஒளிபரப்பப்பட்டு  , மேலும்  ஒரு பந்தல்  அரங்கத்திற்கு  வெளியே  அமைக்கப்பட்டு  LED திரையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  மேலும்  ஆசிரியர்கள் தனியாக பேருந்து,  இரயிலில் வந்த ஆசிரியர்கள் தொடரந்து  வருகை புரிந்து வருகின்றனர்.  நிகழ்வு  தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

புகைப்படங்கள் 

Post a Comment

0 Comments