தினமும் ஒரு குட்டி கதை



*♻️உழைப்பிற்கு பலன் நிச்சயம் கிடைக்கும். எந்த ஒரு செயலும் உழைத்தால் தான் நிறைவு பெறுகிறது*

*♻️ஊரிலேயே பெரிய ஆலமரம்.அதற்குக் கீழே ஒரு திண்ணை.அந்த திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான்.*

*♻️அவன் வேலை அந்த திண்ணையில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டே இருப்பது.. வெட்டியாய்ப் பேசிக் கொண்டு இருப்பது. சோறும் அப்படித் தான் கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான்.*

*♻️இதுவே ரொம்ப நாளாய் நடந்து கொண்டு வந்தது. அவனைக் கொஞ்ச நாட்களாய் கவனித்து வந்தப் பெரியவர்*

*♻️அவனிடம் போய்,தம்பி, இப்படி இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டியா கால் ஆட்டி கொண்டு இருப்பதை விட, காஞ்சிபுரம் போய் கால் ஆட்டுனாலும் வேலைக்குச் சோறு கிடைக்கும் எனச் சொன்னார்.*

*♻️அவன் உடனே அப்படியா? காஞ்சிபுரத்துல கால் ஆட்டுனாலே சோறா? என நடந்தே நாலு நாள் கழிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான்.*

*♻️வந்த உடனே ஒரு நல்ல திண்ணையாகப் பார்த்து உட்கார்ந்து ,தன் வேலையைத் தொடங்கினான்.*

*♻️இரவு வரை காலை வெட்டியாக ஆட்டிக் கொண்டே இருந்தான், யாரும் இவனைக் கண்டு கொள்வதாக இல்லை.*

*♻️அப்போது அங்கே வந்த ஒருவரிடம் ஊரில் நடந்ததைக் கூறி, சோறும் கிடைக்கும் என்றார் ஒன்றும் கிடைக்கவில்லையே என்றான்.*

*உடனே,அவர் அவனிடம்,*

*♻️இது காஞ்சிபுரம் இங்கே பட்டுத் தொழில் மிக அதிகம். அதனால் நீ அந்தத் தொழில் செய்யும் போது காலைக் கொண்டு செய்ய வேண்டிய வேலை என்பதைத் தான் அந்தப் பெரியவர் அப்படி உனக்குக் கூறி உள்ளார்.*

*♻️நல்ல கால் இருந்தும் பிச்சை எடுக்க நினைக்கும் உன் எண்ணத்தை என்ன சொல்வது? என்றார்.*

*♻️உழைக்காமல் வாழலாம் என நினைத்த அவன் எண்ணமே, அவனை ஏதோ ஒன்றில் அடித்தது போலத் தோன்றியது..*

*😎ஆம்.,நண்பர்களே.*

*🏵️ஒருவரின் உழைப்பு என்றுமே வீணாவது இல்லை.  அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம்.*

*⚽பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டுவிடக் கூடாது.*

*🏵️தொடந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்..*

Post a Comment

0 Comments