தினம் ஒரு கதை - உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை


🌺ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பியபோது, அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. 

🌺 அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
      அவனுடையது தான்..

🌺 அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
     கொடுத்து வாங்க பலரும் தயாராக
     இருந்தனர். ஆனால் இவன் தான்
     விற்கவில்லை.  

🌺 இப்போது, அந்த வீடு அவன் கண் முன்னே
     எரிந்துகொண்டிருந்தது. 

🌺ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
     அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
     எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

🌺வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
     நீரோடு புலம்பிகொண்டிருந்தான். 

🌺"ஐயோ என் வீடு..! என் வீடு.."! என்று
     அலறினான்.

🌺அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து,
     “தந்தையே ஏன் அழுகிறீர்கள்..? இந்த                 
      வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு        
      லாபத்திற்கு விற்றுவிட்டேன்.. இதனால் 
      நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். 

🌺 இதைக் கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. 

🌺 அவனது சோகமனைத்தும் மறைந்து
     மகிழ்ச்சி உண்டானது. 

🌺 இப்போது வணிகனும் கூடியிருந்த அந்த
     கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை
     பார்க்க தொடங்கினான். 

🌺 'அதே வீடு தான்..'
🌺 'அதே நெருப்பு தான்..'

🌺ஆனால் சில வினாடிகளுக்கு முன்
    இருந்த தவிப்பும் சோகமும் இப்போது
    அவனிடம் இல்லை.

🌺 சிறிது நேரத்தில் வணிகனின்
    இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே
    ஏன் இப்படி கவலையில்லாமல்
    சிரிக்கிறீர்கள்..?  நாங்கள் விற்ற இந்த
    வீட்டிற்கு முன்பணம் மட்டுமே
    வாங்கியுள்ளோம். முழுத் தொகை இன்னும்     
    கைக்கு வரவில்லை. 

🌺 வீட்டை வாங்கியவன் இப்போது மீதி
    பணத்தை தருவானா என்பது சந்தேகமே..?
    என்று கூறினான்.

🌺 இதைக் கேட்ட வணிகன் அதிர்ச்சி
    அடைந்தான். மீண்டும் சோகத்தில்
    ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப
    ஆரம்பித்தான். 

🌺 'தனது உடமை எரிகிறதே' என்ற எண்ணம்
       மீண்டும் அவனை வாட்டியது.

🌺 சில மணித்துளிகளுக்குப் பின்பு 
      வணிகனின் மூன்றாவது மகன் ஓடி     
      வருகிறான். “தந்தையே கவலை 
      வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய 
       மனிதன் மிகவும் நல்லவன் போலும். 

🌺 இந்த வீட்டை வாங்க அவன் முடிவு
    செய்தபோது, வீடு தீ பிடிக்கும் என்று
    உங்களுக்கும் தெரியாது எனக்கும்
    தெரியாது. 

🌺 ஆகையால் நான் பேசியபடி முழு
     தொகையை கொடுப்பது தான் நியாயம்
     என்று என்னிடம் இப்போது தான் சொல்லி
     அனுப்பினான்..” என்று மகிழ்ச்சியோடு
     தெரிவித்தான். 

🌺 இதைக் கேட்ட வணிகனுக்கோ ஏக
     சந்தோஷம். 

🌺 கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி
    மகிழ்ந்தான். கண்ணீரும், சோகமும்
    மீண்டும் காணாமல் போய்விட்டது. 

🌺 மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று
    வேடிக்கை பார்க்க தொடங்கினான்.

 #இங்கு_எதுவுமே_மாறவில்லை 
 #அதே_வீடு #அதே_நெருப்பு #அதே_இழப்பு

 இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
 
இது என்னுடையதல்ல என்று நினைக்கும்போது  உங்களை சோகம் தாக்குவது இல்லை.

உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை

Post a Comment

0 Comments