மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல்: 7.5 % இட ஒதுக்கீட்டில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடம்.



மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டில் ஈரோட்டை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (அக்.17) வெளியிட்டார். இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தரவரிசை பட்டியலில் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி, தேவதர்ஷினி 518 மதிப் பெண்களுடன் முதல் இடத்தையும், சென்னை, குரோம் பேட்டை அரசு ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப் பெண்களுடன் 2வது இடத்தையும், வேலூர், உசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் பிரவீன் குமார் 481 மதிப் பெண்களுடன் 3வது இடத்தையும், விழுப்புரம் வளவனூர் எஸ்.ஆர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பிருந்தா 467 மதிப் பெண்களுடன் 4வது இடத்தையும், ஈரோடு, பங்களாபுதூர் அரசு மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ராகுல் 466 மதிப் பெண்களுடன் 5 வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும் திருவள்ளூர், அம்மையார் குப்பம், ஏ.எம்.கே. அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி சத்யா 463 மதிப்பெண்களுடன் 6வது இடத்தையும், சேலம், ஓமலூர், கராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ராஜ்குமார், 455 மதிப்பெண்களுடன் 7து இடத்திலும், சேலம், கொங்கனபுரம், மாதிரி பள்ளியைச் சேர்ந்த மாணவன் சிவகுமார் 446 மதிபெண்களுடன் 8வது இடத்தையும், சேலம், ராமமூர்த்தி நகர், அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பவித்ரா 444 மதிப்பெண்களுடன் 9வது இடத்தையும். திருவண்ணாமலை, செய்யாறு அரசு ஆண்டுகள் மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் தாசபிரகாசம் 439 மதிப்பெண்களுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2022-23-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்தனர். அக்டோபர் 6ஆம் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

தரவரிசைப் பட்டியல் வெளியீடு: மொத்தம் 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பித்திருந்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். 

558 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு: தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு செய்ததியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "848 தேசிய ஒதுக்கீட்டு இடங்கள் போக மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்துக்கான 7,377 இடங்கள் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்காக 2695 மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் கீழ் 454 எம்பிபிஎஸ், 104 பிடிஎஸ் என மொத்தம் 558 இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் (அக்.19) தொடங்குகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments