சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை முற்றுகை போராட்டத்திற்கு களத்தில் இறங்கும் மூத்த சங்கம் . அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வேண்டி ஒன்பது நாட்கள் தொடர் முற்றுகை போராட்டங்கள் சென்னையிலும், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.*


  *அரசு இதுவரை ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றாததால் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் மூத்த ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் மதிப்புமிகு ஐயா திரு செ.முத்துச்சாமி அவர்கள் தலைமையிலான  _தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி_  நாளை 28.02.2024 போராட்ட களத்தில் பங்கு பெறுகிறது.*
      
                                                 *நமக்கு ஆதரவாக போராட்ட களம் இறங்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட / வட்டார பொறுப்பாளர்களை கனிவோடு வரவேற்று  கோரிக்கை வாழ்த்தி  பேச வாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இடைநிலை ஆசிரியர்களுக்காக போராட்ட களமிறங்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியை மனமார வாழ்த்தி வரவேற்கிறது SSTA.*                      
        
*இது ஒரு இயக்கத்திற்கான போராட்டமாக கருதாமல் 14 ஆண்டுகளாக அழிந்து வரும் இடைநிலை ஆசிரியர்களை மீட்டெடுக்கும் போராட்டமாக கருதி அனைத்து அரசு ஊழியர்கள் /ஆசிரியர் இயக்கங்களும் நேரடியாக பங்கு கொண்டு இடைநிலை ஆசிரியர்கள் பேரழிவை தடுக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.*
           
*ஜே.ராபர்ட்*
*SSTA- மாநில தலைமை*
மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் 

Post a Comment

0 Comments