சம வேலைக்கு சம ஊதியம் போராட்டம் - இன்று அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இடைநிலை ஆசிரியர்களுடன் இன்று  தமிழக அரசு பேச்சுவார்த்தை

இடைநிலை ஆசிரியர்கள் செப்டம்பர்-28 முதல் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி அறிவித்த காலவரையற்ற போராட்டத்தை அடுத்து ,இன்று  25.09.2023 காலை தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

14 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களின் மூலமாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க தனியாக  அமைக்கப்பட்ட 3 நபர் குழு தனது அறிக்கையை வழங்க காலதாமதம் செய்து வருவதை கண்டித்து.  

🌺ஆயத்தமாநாடு, 

 🌺செப்டம்பர் 5 முதல் 27வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுதல் 

போன்ற அமைதிவழி தொடர் போராட்டங்களை நடத்திவரும் SSTA அமைப்பு சுமூக முடிவு ஏற்படாத பட்சத்தில் காலாண்டு விடுமுறையில்  செப்டம்பர் 28 முதல் தொடர் உண்ணா விரதம் இருக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகள்

🌺ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு அளித்தல்,  

🌺டிக்கெட் முன்பதிவு செய்தல்

🌺 தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டி ஒட்டுதல்) 

என தீவிரமடைந்நதுள்ளது. 


Post a Comment

0 Comments