தினம் ஒரு கதை - உண்மையைச் சொல்கிறேன்!

சிறுவர் நீதிக்கதைகள் - உண்மையைச் சொல்கிறேன்!

உண்மையைச் சொல்கிறேன்!
வெகு காலத்துக்கு முன் பழமுதிர் சோலை என்றநாட்டை மன்னன் பழவர்த்தன் ஆண்டு வந்தார்.அவர் நீதி நெறி தவறாதவர்; வாய்மைநிரம்பியவர்; உண்மை பேசுபவர். தன்னைப்போலவே தன் குடிமக்களும் இருக்க வேண்டும்என்று விரும்புபவர். அவருக்கு திருமணமாகிநீண்ட நாட்களாகியும் குழந்தைகள் இல்லை.தனக்கு பின் தன் நாட்டை ஆளத் தக்க வாரிசுகள்இல்லாததால், தன் நாட்டு மக்களில் நீதியும்,நேர்மையும் தவறாத உண்மை யான ஒருஇளைஞனைக் கண்டுபிடித்து, அவனைமன்னனாக்க வேண்டும் என்று விரும்பினார்.இதற்காக யாருடைய ஆலோசனையையும்நாடவில்லை. அவரே மிகச் சிறந்த அறிவாளியாகஇருந்த படியினால், பல நாட்கள் யோசித்து ஒருமுடிவு செய்தார்.நாட்டில் உள்ள வீரம் மிக்க இளைஞர் களைஅழைத்து வில் போட்டி நடத்தினார். அதில்வென்றவர்களை அழைத்து, வாள் போட்டி நடத்திபரிசீலனை செய்தார். அதன்பின், வாய் மொழிக்கேள்விகள், சமயோசிதமான கேள்விகள் என்றுராணுவத்துக்கு ஆள் எடுப்பதைப் போலஅவர்களைச் சோதித்தார்.கடைசியாக, பத்து இளைஞர்கள் தேறினர்.அவர்களை மன்னர் அழைத்து, அவர்கள்அனைவரிடமும் தனித்தனியாக ஒரு செடியின்விதையைக் கொடுத்தார்."இந்த விதையை ஒரு தொட்டியில் போட்டுவளர்த்து, கவனமுடன் கண்காணித்து,  ஆறுமாதம் சென்ற பிறகு, வளர்த்த செடியுடன் என்முன் வர வேண்டும். இதுதான் நான் உங்களுக்குவைக்கக்கூடிய இறுதி கட்டச் சோதனை,''என்றார்.பத்துப் பேரும் அதனை வாங்கிக் கொண்டனர்.அதில், சாந்தனு என்ற வாலிபன் ஒருவனும்இருந்தான். எல்லாரும் மன்னர் சொன்னபடி அந்தவிதையைத் தொட்டியில் போட்டுச் சிறந்த உரங்களையும், எருவையும் இட்டு வளர்க்கஆரம்பித்தனர்.சாந்தனுவும் அப்படியே செய்தான். ஆனால், என்னகாரணத்தினாலோ அவனது விதை முளைத்துச்செடியாகவில்லை. மற்றவர்களின் வீட்டுக்குப்போய் அவர்கள் செடி வளர்ந்திருக்கிறதா என்றுஅவன் கண்காணித்தான்.என்ன ஆச்சரியம்! மற்றவர்களின் விதையானதுநன்றாக முளைவிட்டு, இலை விட்டுச் செழித்துவளர ஆரம்பித்திருந்தது.வீட்டுக்கு வந்த சாந்தனு தன்னிடமுள்ள விதைசெடியாக எல்லா விதமான முயற்சி களையும்செய்தான். ஆனால், என்ன காரணத்தினாலோ,அந்த விதை முளைக்கவில்லை."முளைக்காத விதையை ஒரு வேளை மன்னர்தனக்குத் தந்திருப் பாரோ?' என்று எண்ணினான்.மறுகணமே, "ச்சே... என்ன மோசமான எண்ணம்...எல்லாருக்கும் கொடுத்தது போல தான் எனக்கும்கொடுத்தார். என் விதை முளைக்கவில்லைஎன்றால், அது என் துரதிருஷ்டம். மற்ற வர்கள்விதை எல்லாமே முளைத் திருப்பதுஅவர்களுடைய அதிர்ஷ்டம்."ஆறு மாதம்வரை பொறுத் திருந்து பார்ப்போம்...அப்போதும் விதை முளைக்காவிட்டால், "அரசே,என் விதை மட்டும் முளைவிக்கவில்லை!' என்றுஉண்மையைக் கூறி விடுவோம். அதற்காகமன்னர், நான் சரியாக செடியைப்பராமரிக்கவில்லை என்று கருதி எனக்குத்தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்!'என்று கருதினான்.ஆறு மாதம் சென்றன.வெற்றிப் பெருமிதத்துடன் மீதியுள்ள ஒன்பதுபேரும் தங்கள் கையில் தொட்டியை ஏந்திவந்தனர். அதில் இரண்டடி நீளத்துக்குச் செடிவளர்ந்திருந்தது. அது ஆரோக்கியமாக இருந்தது.மன்னர் எல்லாருடைய தொட்டி களையும்பார்த்துக் கொண்டே வந்தார். அவர் இதழ்களுக்கிடையில் புன்முறுவல் ஒன்றுநெளிந்தது.சாந்தனுவிடம் வந்ததும் அவன்காலித் தொட்டியுடன் நிற்பதைக் கண்டவுடன்மன்னர் முகம் மாறியது.நடுநடுங்கிப் போனான் சாந்தனு. அவனையேஉற்றுப் பார்த்த மன்னர் அவனிடம் அதிகாரமாககேட்டார்,"உன்னுடைய பெயர் என்ன?''"என் பெயர் சாந்தனு அரசே! தயவு செய்துஎன்னை மன்னிக்க வேண்டும். நான் ஆறு மாதகாலமாக இந்த விதையைச் செடி யாக்கஎவ்வளவோ பாடுபட்டேன். ஆனால்,உண்மையிலேயே என்னால் அதைச் செடியாக்கமுடியவில்லை. என்னை நம்புங்கள் அரசே!''என்று மண்டியிட்டு கதறினான்.மன்னர் கீழே குனிந்து அவனைத் தூக்கி நிறுத்தித்தன் மார்போடு அணைத்துக் கொண்டார்."எதிர்கால மன்னனைத் தேர்ந் தெடுக்கவேஇப்போட்டிகளை வைத்தேன். அதில்வென்றவனாக இந்த சாந்தனுவைஅறிவிக்கிறேன். இவன்தான் எதிர்கால மன்னன்!''என்றார்.இதைக் கேட்ட அனைவரும் வியப்படைந்தனர்.முதல் மந்திரி எழுந்து, ""அரசே, தாங்கள்சொன்னபடி ஒரு செடி கூட வளர்க்கத் தெரியாதஇந்த வாலிபனா எதிர்கால மன்னன்?மன்னருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்துசெடியைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்காமல்சோம்பேறித் தனமாக இருந்து விட்டு, வெறும்பூந்தொட்டியைக் காட்டிய இவனா இந்த நாட்டுமன்னன்?'' என்று கேட்டார்."அமைச்சரே, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள். இவன் அவனால் ஆகக் கூடியமுயற்சிகளை எல்லாம் செய்து பார்த்தான்என்பதை நான் நம்புகிறேன். ஏன் தெரியுமா? நான்பத்து இளைஞர்களுக்கும் செடி வளர்க்கக்கொடுத்த பத்து விதைகளும் நன்றாக வேகவைக்கப்பட்டு உலர்த்தப்பட்ட விதைகள்."அதில் எந்தச் செடியும் முளைக்காது.என்னிடமிருந்து பரிசுகளோ, பதவியோபெறுவதற்காக மற்ற இளைஞர்கள் வேகவைக்கப்பட்ட விதைகளைத் தூக்கி எறிந்துவிட்டு,அதற்குப் பதிலாக அதே போன்ற நல்லவிதைகளை வாங்கிப் பயிரிட்டுச் செடிகளாக்கிக்கொண்டு வந்திருக்கின்றனர்."ஆனால் சாந்தனு அப்படிச் செய்ய வில்லை. அரசகட்டளையை ஏற்று ஆறு மாத காலம் போராடிப்பார்த்திருக் கிறான். விதை முளைக்க வில்லைஎன்றதும், அதை உள்ளபடியே என்னிடம்அறிவிக்கக் காலித் தொட்டியுடன் வந்தான்."உண்மையைச் சொல்லும்போது என்னால்அவனுக்குத் தண்டனை ஏற்பட்டால் கூட அதைத்தாங்கச் சித்தமாயிருந்திருக்கிறான் என்பதைஅவன் செயல், பார்வை, பேச்சு, வார்த்தை,நடத்தை மூலம் அறிந்து கொண்டேன்."இப்படி நேர்மையாக நடந்து கொண்டதன்மூலமாக அவனால் நிச்சயம் நாடு செழிக்கும்'என்றுதான் அவனை மன்னனாக அறிவித்தேன்.மன்னரின் அறிவுக் கூர்மையை எண்ணிஅனைவரும் வியந்து பாராட்டினர். அங்கிருந்தசெடி வளர்த்த ஏனைய இளைஞர்கள் அரசனிடம்மன்னிப்புக் கோரினர். அரசனும் அவர்களைமன்னித்தார்.

Post a Comment

0 Comments