தினம் ஒரு கதை - காரணமின்றி இந்த உலகில் எதுவும் நடக்காது.!!!



*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கைதான் என்பதை உணரவேண்டும்

*ஒரு பெரிய வீட்டில் ஆடு , மாடு, நாய்கள் , இருப்பதை அருகில் சிறிய வீட்டில் இருக்கும் ஒரு குட்டி எலி கவனித்து வந்தது அதற்கு நீண்ட நாட்கள் ஆசை

*அதாவது இந்த விலங்குகள் எல்லாம் பெரிய வீட்டில் வசதியாக ஆடி பாடி திரிகிறதே ஆனால் நமக்கு மட்டும் வீடு அப்படி இல்லாமல் மிகவும் சிறியதாக இருக்கிறதே என்று

*இங்கே நம் வீட்டில் ஓடி, ஆட இடமே இல்லையே என்று மிகவும் வருத்தம் , உடனே ஒரு நாள் தன்னுடைய தாயிடம் கேட்டது இந்த குட்டி எலி

*அம்மா ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு படைப்பு நமக்கும் பெரிய வீடு இருந்தால் நாமும் மற்ற விலங்குகள் போல சந்தோசமாக இருக்கலாம் அல்லவா என்று கேட்க

*அதற்கு தாய் எலி அமைதியாக இதற்கான காரணத்தை நீயே விரைவில் உணர்ந்துகொள்வாய் என்று கூறியது, இப்படியே சில நாட்கள் போனது

*ஒருநாள் அந்த குட்டி எலி வெளியே சுற்றி திரியும்போது அந்த வழியாக வந்த பூனை அதை பார்த்து துரத்த ஆரம்பித்தது , உடனே உயிர் பயத்தில் அந்த குட்டி எலி அந்த பெரிய பங்களாவின் தோட்டத்தில் போனது அங்கேயும் அந்த பூனை விடவில்லை

*மீண்டும் விடாப்பிடியாக துரத்தியது கடைசியில் அந்த குட்டி எலி தன்னுடைய சிறிய வீட்டிற்குள்ளே புகுந்தது.

*இப்போது அந்த பூனையால்  உள்ளே நுழைய முடியாமல் ஏமாந்து விட்டு சென்றது

*இதை கண்ட அந்த தாய் எலி கூறியது , இப்போது இந்த சிறிய வீட்டின் அருமை புரிகிறதா ? எதையும் அதன் அருமை புரியாமல் ஏளனமாக பார்க்கக்கூடாது , இந்த சிறிய வீடு இல்லையென்றால் இன்று நீ உயிரோடு இருக்கமாட்டாய் என்று கூறி அந்த குட்டி எலிக்கு புரியவைத்தது .

*இதை உணர்ந்த அந்த குட்டி எலியும் தன் ஆசைகளை குறைத்து சிறிய வீட்டிலே மகிழ்ச்சியோடு வாழ்ந்தது.

*இப்படித்தான் நண்பர்களே நாமும் , 

*இருக்கும் இடத்தில்  இருக்கின்ற சிறப்புகளை அறியாமல் எதை எதையோ தேடுகிறோம் மற்றும் இறைவனையும் குறைக்கூறுகிறோம்

*நமக்கு செல்வாக்கு , பணம் ,புகழ் கிடைத்தால் அதோடு நிம்மதி இல்லாத வாழ்க்கை அமையும் என்பதை உணரவேண்டும்.

*நமக்கு இறைவன் கொடுக்காத ஒன்றை பற்றி கவலைப்படவேண்டாம் , ஒருவேளை நாம் கேட்கும் ஒன்று கிடைத்தால் அதனால் நமது உயிருக்கே ஆபத்து கூட இருக்கலாம் ( அது காதல் , பணம் , நண்பர்கள் , சொத்து , சொந்தம் இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ) 

*இப்போது நாம் எந்த நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறப்பான வாழ்க்கைதான் என்பதை உணரவேண்டும்

*சிலர் சொல்லுவாங்க தனியாக இருக்கிறன் யாரும் இல்லை என்று ஒருவேளை நிறைய நண்பர்கள் இருந்து அவர்கள் உங்களை மதிக்காமல் , அவர்களால் உங்கள் வாழ்க்கையே சீரழிந்தால் என்ன செய்யமுடியும் ??

*எனவே சிலநேரத்தில் சிலர் இல்லாமல் இருப்பதும் நன்மைக்கே என்று தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்

*எல்லாத்துக்கும் மிகப்பெரிய காரணம் இருக்கலாம் , நாம் இப்போது அனுபவிக்கும் சிறிய வலிகளுக்கு பின்னால் இறைவன் மிகப்பெரிய நம்மால் தாங்கமுடியாத வலிகளை மறைத்துக்கூட வைக்கலாம் .

*எனவே எதையும் ஏற்றுக்கொண்டு இருப்பதை வைத்து சிறப்போடு வாழ கற்றுக்கொள்வோம் , நாம் இப்போது என்ன நிலையில் இருக்கிறோமோ அதுவே சிறந்த ஒன்றுதான் என்பதை உணர்வோம் ...

*நல்லதே நினை*
*நல்லதே நடக்கும்*

Post a Comment

0 Comments