தினம் ஒரு கதை

ஒருநாள்  சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம் 
சொன்னார் ,

பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி 
பூஜை செய்து வந்தால்,  இப்பொழுது இருக்கும் 
கணவனே , ஏழு ஜென்மத்துக்கும் 
கணவனாக அவர்களுக்கு கிடைப்பான் , ஆனால் 
அதில் ஒரு சிக்கல் இருக்கிறது .

என்ன சிக்கல் ..??  பிரம்மா வினவினார் .

பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள் ,
ஆனால் ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் 
என்கிறார்கள், அதுதான் சிக்கல் . இருவரையும் 
திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,

பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார் ,
அவர் பெயர்  சாணக்கியர், அவரைப் 
பாருங்கள் , இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .
 
சித்திரகுப்தர் , சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து 
பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு 
விடுவோம் என்று முடிவு செய்து ,
அவர்களிடம் பேசினார்கள் .

கணவன்மார்களில் ஒருவர் ,ஒரு யோசனை 
சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர் 
அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு 
இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் 
இருக்க முடியாது என்று கூறிவிட்டு 
இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள்
என்று சொன்னார் .

இந்த தீர்வை , சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் 
கூறினார் . அதற்கு அந்த பெண்கள் 
சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டுவிட்டு 
எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று 
சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு .." அது " ..??
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம் ,  பிரம்மா நீங்கள் 
கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற 
கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால் 
ஒரு நிபந்தனை , ஏழு ஜென்மத்திற்கும் அதே 
மாமியார்தான் இருப்பார் , அதற்கு உங்களுக்கு 
சம்மதமா என்றார் ....😀😆😂
........ " வாழ்க வளமுடன் " ..

Post a Comment

0 Comments