பிப்ரவரி 28 கடைசி தேதி. தமிழகத்தில் சுமார் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை


தமிழகத்தில் சுமார் 2.95 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான காலக்கெடு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மின் ஆதார் இணைப்பு
இணைக்க இந்த  link  ஐ Click செய்க 👇👇👇

மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், தமிழக மின்வாரியத்தின் கீழ் உள்ள 2 கோடி 67 லட்சம் மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்கும் நடவடிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் அரசாங்கம் துவங்கியது. இந்த சேவையை மேற்கொள்ள மின் நுகர்வோருக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அரசாங்கம் கொடுத்த காலக்கெடு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2.95 லட்சம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பை ஆதாருடன் இணைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, மின் மற்றும் ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு முடிவடைய இருக்கும் நிலையில், நேற்று வரைக்கும் 98 சதவீதம் பேர் இந்த சேவையை முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்னும் 1.5 சதவீதம் பேர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என கணக்கிடப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments