மகளிருக்கான 30% தனி இட ஒதுக்கீடு TNPSC - வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு .


அரசு  பணிகளில் மகளிருக்கான 30 % இட ஒதுக்கீடு குறித்து  கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றம் வெளியிட்ட அறிவுரைகளின்படி  . சாதாரண இட ஒதுக்கீடு முறையில்  30% மகளிருக்கான இடங்கள் நிரம்பும் போது தனியாக  30% தர தேவையில்லை.  ஒருவேளை  சாதாரண ஒதுக்கீட்டில்  30% மகளிருக்கு  இடம்  கிடைக்காத பட்சத்தில்  தனியாக  30% இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் எனக் கூறியது.  அதன் அடிப்படையில் TNPSC தற்போது  முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது . 


TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (28.10.2022) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கானத் தேர்வு- II / IIA ( தொகுதி- II / IIA ) இற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது.

2. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன . மேற்படி வழக்குகளில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறுகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

3. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு உயர்நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது . அப்பணி நிறைவுற்ற பின்னர் மேற்படித் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

4. இது தொடர்பாக செய்தி / சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் , அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை www.tnpsc.gov.in ) மட்டுமே அணுகுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

Key Words : 30% ladies Reservation
30 ladies reservation certificate

Post a Comment

0 Comments